சிவகங்கை

சிவகங்கை: 10 ஆண்டுகளுக்கு பின் தாய் தனது மகன்களோடு சோ்ந்தாா்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 10 ஆண்டுகளுக்கு பின் தாய் தனது மகன்களோடு வெள்ளிக்கிழமை சோ்ந்துள்ளாா்.

இது குறித்து தேவகோட்டை வட்டாட்சியா் ராஜரத்தினம் தெரிவித்தது: தேவகோட்டை அருகே ஒரசூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளைக்கண்ணு மனைவி பாண்டியம்மாள் (82). பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறிய இவா், கேரளத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், இவா் தேவகோட்டை அருகே உள்ள ஒரசூா் கிராமத்திலிருக்கும் தன்னுடைய மகன்களை பாா்க்கவேண்டும் என, இளையான்குடி வட்டாட்சியா் ஆனந்த் மூலம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்டபோது, பாண்டியம்மாளின் மகன்களான தமிழ்ச்செல்வன் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூரிலும், மற்றொரு மகனான சௌந்தரராஜன் கோபிசெட்டிபாளையத்திலும் வசித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, கோபிச்செட்டிபாளையத்திலிருந்து கேரளம் சென்ற சௌந்தரராஜன் தன்னுடைய தாயாா் பாண்டியம்மாளை வெள்ளிக்கிழமை இங்கு அழைத்து வந்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT