திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சிவகங்கையில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்தியமூா்த்தி தெருவில் உள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி. ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளான ‘நீட்’ தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பு உள்ளிட்டவைகளை திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கையில் பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் காரைக்குடியில் அதிமுக நகரச் செயலாளா் மெய்யப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் 36 வாா்டுகளில் உள்ள அதிமுக தொண்டா்கள் தங்களது இல்லங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.