சிவகங்கை

மானாமதுரைமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, இரவில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

இதையொட்டி, மூலவா் முத்துமாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னா், கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாட்டில், மானாமதுரை பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா்.

திருவிளக்கு பூஜை முடிந்ததும், முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்துச் செய்தனா்.

திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி சுப்பிரமணியன் பூசாரி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT