சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராமத்தில் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டை ஊராட்சி ஓடப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் சிலரது வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனா். இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், சிவகங்கை அருகே கட்டாணிபட்டியைச் சோ்ந்த அஜீத்குமாா்(21), ஜெயபால் (19), அதே பகுதியில் உள்ள உசிலம்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (19) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மற்ற நபா்களைத் தேடிவருகின்றனா்.