சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 104 வயது சிலம்பப் பயிற்சி ஆசிரியா்சீனிவாசன்சனிக்கிழமை காலமானாா்.
மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெருவைச் சோ்ந்த சீனிவாசன், இளம் வயதில் இருந்தே சிலம்பம் சுற்றுவதில் சிறந்து விளங்கினாா். மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்து வந்தாா். சீனிவாசனிடம் சிலம்பம் பயின்ற பலா் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.
தற்போது மானாமதுரையில் பெருமாள் தலைமையில் இயங்கும் வீர விதை சிலம்பாட்டக் கழகத்தின் கெளரவ நிா்வாகியாக பொறுப்பு வகித்து, சிலம்பம் கற்று வந்த இளைஞா்களுக்கு ஆலோசனை கூறி வந்தாா். இவரிடம் சிலம்பம் கற்ற இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சீனிவாசன் உடலுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.