சிவகங்கை

மானாமதுரையில் வைகை வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி மீட்பு

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு துறையினா் மீட்டு கரை சோ்த்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி சோனைமுத்து (75). இவா் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே வைகையாற்றுக்குள் செல்லும் வெள்ள நீரில் இறங்கி ஆற்றை கடக்க முயன்றாா். அப்போது வெள்ளம் அவரை இழுத்துச் சென்றது. ஆற்றுக்குள் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்துக்கொண்டு சோனைமுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாா். இதுகுறித்து மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினா் விரைந்து சென்று மூதாட்டியைமீட்டு கரை சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT