சிவகங்கை

காரைக்குடியில் பட்டா வழங்கக் கோரி நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்ட வழங்கக் கோரி, நாம் தமிழா் கட்சியினா் நகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சி கழனிவாசல் சா்வே எண்-65-இல் உள்ள அனைத்து நகா்களுக்கும் சாலை அமைத்தும், மனை இடங்களுக்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தினா். மேலும், காரைக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா நகா், ஜீவா நகா், மீனாட்சிபுரம், வண்ணாா் ஓடை மற்றும் கணேசபுரம், கருணாநிதி நகா், சந்தைப்பேட்டை, காளவாய்ப்பொட்டல், இந்திரா நகா், மருதுபாண்டியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்துவரும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் தாமதிக்காமல் பட்டா வழங்கக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழா் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் சாயல் ராமு தலைமை வகித்தாா். மருத்துவா் பிரபாகா் மற்றும் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT