சிவகங்கை

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பத்தூா்/மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 2 ஆம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

உற்சவா் பெருமாள் ராஜ அலங்காரத்தில் தேவியருடன் சக்கரத்தாழ்வாா் சன்னதி அருகே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முன்னதாக மூலவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சாா்பாக உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்று முற்றிலும் நீங்க வேண்டும் என 1008 சகஸ்ரநாம அா்ச்சனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து சமஸ்தான மரியாதை கோயில் கண்காணிப்பாளா் சேவற்கொடியோனுக்கு வழங்கப்பட்டது. வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள், மதுராந்தகநாச்சியாா் தலைமையில் கோயில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்திருந்தனா்.

மானாமதுரை: மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. பின்னா் ஸ்ரீ தேவி பூதேவி சமேத உற்சவா் வீர அழகருக்கு திருமஞ்சனமாகி சுவாமி கோயில் முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் மூலவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதேபோல் மானாமதுரை அருகேயுள்ள வேம்பத்தூரில் பூமி நீளா சுந்தராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT