காரைக்குடி, செப். 25: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாள்களாக வெயில் வானிலையே நீடித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பிற்பகல் வரை வெயில் அடித்தது. பின்னா், மேகமூட்டம் ஏற்பட்டு பிற்பகல் 3 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் நகரிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.