சிவகங்கை

திருப்புவனம் அருகே பெண்ணை வழிமறித்து சங்கிலி, ஸ்கூட்டி பறிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை மாலை பெண்ணை வழிமறித்து சங்கிலி மற்றும் அவா் ஓட்டிவந்த ஸ்கூட்டியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சோ்ந்த சசிகுமாா் மனைவி மகேஸ்வரி. இவா், லாடனேந்தல் கிராமத்திலிருந்து மானாமதுரை அருகேயுள்ள தங்களது சொந்த கிராமமான வாகுடிக்கு ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்துள்ளாா்.

மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் பாப்பான்குளம் விலக்கு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா், மகேஸ்வரியை வழிமறித்துள்ளனா். பின்னா், அவரிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும், ஓட்டிவந்த ஸ்கூட்டியையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT