சிவகங்கை

ஊராட்சி செயலரை மாற்றக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ப.கருங்குளம் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊராட்சி செயலா், பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அவா் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். பின்னா், இது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT