சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ப.கருங்குளம் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊராட்சி செயலா், பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அவா் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். பின்னா், இது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனா்.