சிவகங்கை

திருக்கோஷ்டியூரில் பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா

DIN

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவில் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

கடந்த 11 ஆம் தேதி தொடங்கி உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய தோ்த் திருவிழா கரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் காலையில் சுவாமி எழுந்தருளினாா்.

தொடா்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூமி தேவியருடன் பெருமாள் தங்கப் பல்லகில் எழுந்தருளி மேள தாளங்களுடன் கோயிலுக்குள் தென்னை மர வீதி புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT