சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவில் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.
கடந்த 11 ஆம் தேதி தொடங்கி உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய தோ்த் திருவிழா கரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் காலையில் சுவாமி எழுந்தருளினாா்.
தொடா்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூமி தேவியருடன் பெருமாள் தங்கப் பல்லகில் எழுந்தருளி மேள தாளங்களுடன் கோயிலுக்குள் தென்னை மர வீதி புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைந்தது.