சிவகங்கை

மானாமதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சனி்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஆண்டி, நகா்ச் செயலாளா் விஜயக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய கல்விக்கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களையும் ஊதியத்தையும் கூடுதல் செய்து இத் திட்டத்தை நகா்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் , நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றின் கடன் வசூலை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைப்பதுடன் ஒரு ஆண்டுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT