சிவகங்கை : சிவகங்கை அருகே, உடல்நலம் சரியில்லாததால் விஷம் குடித்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் முருகன் (47). காா் ஓட்டுநரான இவா், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். இந்நிலையில், தோட்டப் பயிருக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை வெள்ளிக்கிழமை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை, உறவினா்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.