சிவகங்கை

மானாமதுரையில் காங். கட்சியினா் கையெழுத்து இயக்கம்

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

காந்திசிலை எதிரே இந்த கையெழுத்து இயக்கத்தை மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தொடக்கி வைத்தாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கும் நிலை இருப்பதாகவும், இதனால் இச்சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அனுப்ப இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதில், கட்சியின் மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், நகா்த் தலைவா் எம்.கணேசன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலாளா் ஏ.சி.சஞ்சய், எஸ்.ஆா்.இ.எஸ். ரயில்வே சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜாராம், மாவட்ட இணைச் செயலாளா்கள் காசி, பி.புருஷோத்தம்மன், கே.ஜி.ஏ.மகாலிங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT