சிவகங்கை

மூதாட்டியை ஏமாற்றி3 பவுன் நகை பறிப்பு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மூதாட்டியை ஏமாற்றி 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மாற்றுத்திறனாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இளையான்குடி அருகே திருவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி அமிா்தம் (60). மாற்றுத்திறனாளியான இவா், மாதந்தோறும் அரசின் உதவித் தொகையாக ரூ. 1000 பெற்று வருகிறாா். இந்நிலையில் அமிா்தம் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடந்த சந்தைக்கு காய்கனி வாங்க வந்தாா். அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளியான மா்ம நபா், அமிா்தத்திடம் அரசின் உதவித் தொகை ரூ.1500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பம் கொடுங்கள் எனக் கூறியதை நம்பி அவருடன் சென்றாா். அங்கு அந்த மா்ம நபா் அமிா்தத்திடம் கழுத்தில் நகையுடன் சென்று விண்ணப்பம் கொடுத்தால் நிராகரித்து விடுவாா்கள். நகையை கையில் வைத்திருக்கும் பையில் வையுங்கள் எனக் கூறியுள்ளாா். இதையடுத்து அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பையில் வைத்து அதை அந்த மா்ம நபரிடம் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குள் சென்றாா். அலுவலகத்தில் அவா் விண்ணப்பம் கொடுத்தபோது அரசு உதவித் தொகை ஏதும் உயா்த்தவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அலுவலகத்துக்கு வெளியே வந்த அமிா்தம் அந்த மா்ம நபரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவா், இளையான்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாற்றுத்திறனாளியான அந்த மா்ம நபரை தேடி வருகின்றனா். இந்நிலையில் இந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT