சிவகங்கை

திருப்புவனம்: கிருதுமால் நதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிருதுமால் நதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்புவனம் அருகே ஓடாத்தூா் கிராமம் உள்ளது. இங்குள்ள ஓடாத்தூா், வல்லாரேந்தல், நாச்சியாரேந்தல், சேந்தநதி, சிறுவனூா், எஸ்.வாகைக்குளம், அருணகிரி, நண்டுகாச்சி, ரெட்டகுளம், ஆலாத்தூா், திருவளா்நல்லூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்காகவும், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காகவும் தினசரி பழையனூருக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேற்கண்ட கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பழையனூரிலிருந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே விருதுநகா் மாவட்டம் கட்டனூா், இருஞ்சிறை, பிடாரிச்சேரி ஆகிய பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் கிருதுமால் நதி உள்ளது. அந்த நதியில் மழை பெய்தால் பரவலாக தண்ணீா் செல்வது வழக்கம்.

அப்போது பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் ஓடாத்தூா் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும். இதனால் அப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிருதுமால் நதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT