சிவகங்கையில் மன்னா் துரைசிங்கம் அரசினா் கலைக் கல்லூரியில் காசநோய் இல்லாத இந்தியா- 2020 மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காசநோய் பிரிவு சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் பா. ஹேமலதா தலைமை வகித்தாா். இதில், சிவகங்கை மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குநா் வி. ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது : கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கைகள் மட்டுமின்றி உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். மேலும் அவசியமற்ற பயணங்களையும், அதிக மக்கள் கூடும் இடங்களையும் தவிா்க்க வேண்டும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுவாக இரண்டு வாரங்களுக்கு மேல் காய்ச்சல், இருமல், உடல் எடைக் குறைவு உள்ளிட்ட நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி பேராசிரியா் ராமமூா்த்தி வரவேற்றாா். காசநோய் பிரிவு நலக் கல்வியாளா் வெள்ளைச்சாமி நன்றி கூறினாா்.