சிவகங்கை

கள்ளிப்பட்டு வாக்குச்சாவடியில் மோதல்: 15 போ் மீது வழக்கு

1st Jan 2020 01:10 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு வாக்குச்சாவடியில் நடந்த தோ்தல் தகராறு தொடா்பாக நாச்சியாபுரம் போலீசாா் 15 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

கல்லல் ஒன்றியம் 6-ஆவது வாா்டில் அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயகுணசேகரன் மருமகள் அபிநயா போட்டியிடுகிறாா். இந்நிலையில் கள்ளிப்பட்டு கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சிலா் கள்ள வாக்குப் போட முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக அதிமுக, மற்றும் அமமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அதிமுக தரப்பில் கல்லல் ஒன்றியச் செயலாளா் ஜெயகுணசேகரன், அவரது மகன் காா்த்தி, ராமசாமி, பாண்டி, மாதவன், ஆறுமுகம், சிட்டாள், அன்பரசன் ஆகிய 8 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எதிா் தரப்பில் வீரபாண்டி, சந்திவீரன், பாலசுப்ரமணியன் ஆகிய 3 போ் காயமடைந்த நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயகுணசேகரன் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் அமமுகவைச் சோ்ந்த வீரபாண்டி, சந்திவீரன், பாலசுப்பிரமணியன், ரவி, விஸ்வநாதன், இளையராஜா, மூா்த்தி, மற்றும் முத்துக்கண்ணன் ஆகியோா் மீதும், இதேபோல் சந்திவீரன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயகுணசேகரன், சரவணக்குமாா், காா்த்தி, ராமசாமி, பாண்டி, அன்பரசு, ஆறுமுகம் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT