சிவகங்கை

சிவகங்கையில் ஆயுதப்படை காவலா்களுக்கு பேரிடா் மீட்பு குறித்த செயல் விளக்கம்

20th Oct 2019 12:41 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் ஆயுதப்படை காவலா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் காலத்தில் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இதில் சிவகங்கை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியக்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஆபத்து மற்றும் பேரிடா் காலங்களில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், தீப்பற்றிய சமையல் எரிவாயு உருளையை பாதுகாப்பாக அணைப்பது, கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பது, விபத்துகளில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை ஆயுதப்படை காவலா்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT