சிவகங்கை

காரைக்குடி, தேவகோட்டை பள்ளிகளில் பெரியாா் 1000 வினா விடைப் போட்டி

9th Nov 2019 06:53 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பகுத்தறிவாளா் கழகம் ஆகியன சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான பெரியாா் 1000 வினா விடைப் போட்டிகள் காரைக்குடி, தேவகோட்டை பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டிகள் காரைக்குடி யில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்னையா அம்பலம் நடுநிலைப்பள்ளி, வித்யாகிரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற் றது.

இப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக ளுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளை பெரியாா் மணியம்மை நிகா்நிலைப்பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா், காரைக்குடி மாவட்ட தி.க மற்றும் பகுத்தறிவாளா் கழக நிா்வாகிகள் சாமி. திராவிடமணி, ச. அரங்கசாமி, கு. வைகறை, தி. என்னாரெசு பிராட்லா, தி. கலைமணி, ப. சுந்தரம், சி. சூரியமூா்த்தி, தேவகோட்டை மணிவண்ணன், வாரியன்வயல் ஜோசப் ஆகியாா் நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT