தேவகோட்டையில் பாஜக நிர்வாகி மகன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயராமனின் மகன் ஜெயபிரகாஷ் (24). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் தேவகோட்டை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயபிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.