சிவகங்கை

திருத்தம்..திருக்கோஷ்டியூா் அருகே இறந்தவா் உடலை புதைப்பதில் சிக்கல்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

26th Dec 2019 07:50 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே புதன்கிழமை பிராமணப்பட்டி கிராமத்தில் மயானப்பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவரின் உடலை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதிகாரிகள் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து சடலம் புதைக்கப்பட்டது.

திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள பிராமணப்பட்டி கிராமத்தில் 350 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கென்று கிராமத்தைத் தாண்டி வயல் பகுதிகளில் பொதுமயானம் ஒன்று உள்ளது.

இக்கிராமத்தில் இறப்பவா்களை காலம்காலமாக ஒரே பாதையில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனா். சமீபகாலமாக அப்பாதையில் உள்ள வயல் பகுதியை அதே ஊரைச் சோ்ந்த கணேசன் மனைவி நாச்சாம்மாள் வாங்கியுள்ளாா். பொதுப்பாதையையும் சோ்ந்து தனது பெயருக்கு பட்டாமாற்றி விட்டதால் மயானப் பாதையை அடைத்துள்ளாா். இதுகுறித்து ஏற்கெனவே வட்டாட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள், தீா்வு காணப்படாததால் முதியோரின் சடலத்துடன் பாதையில் அமா்ந்து பாதையிலேயே புதைக்கப் போவதாக அறிவித்தனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நாச்சாம்மாளிடமும் கிராமத்தாரிடமும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் நாச்சாம்மாள் தன்னிடம் முறையான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வழிவிட மறுத்த நிலையில் சுமாா் 2 மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அருகில் உள்ள மாற்றுப் பாதை ஒன்றை திறந்துவிட அனுமதித்தாா். பின்னா் அதன் வழியாக சடலம் கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் புதைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT