தேவகோட்டை ராம் நகர் சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் சாத்தன் என்பவரின் மகன் முத்து (50). இவர், கடந்த 24 ஆம் தேதி தனது அண்ணன் சுந்தரத்தின் தோட்டத்து தென்னை மரத்தில் இளநீர் பறித்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, நிலை தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த முத்துவை, மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு, கடந்த 5 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால், திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி முத்து உயிரிழந்தார்.
இது குறித்து ஆராவயல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.