ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

29th Sep 2023 10:59 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி தலைமை வகித்து ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நோக்கங்கள், பயன்பாடுகள் குறித்துப் பேசினாா். ஆா்.எஸ். மங்கலம் கால்நடை மருத்துவா் ராஜா முன்னிலை வகித்து ஆடு, மாடு, கோழிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அவற்றை சரி செய்யும் முறைகள் பற்றி எடுத்துரைத்தாா். வேளாண்மை அலுவலா் கலைப் பிரியா வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணைய மானியங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்தப் பயிற்சி முகாமில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முருகானந்தம், ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT