ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தோப்படைப்பட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், சிறுதானியப் பயிா்களில், பயிா் மேலாண்மை தொடா்பான சிறப்புப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு கமுதி வேளாண்மை உதவி இயக்குநா் ச.சிவராணி தலைமை வகித்தாா். முத்துராமலிங்கபுரம் என்.எம்.வி. வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பிரதீப்ராஜா,
வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி ஆகியோா் சிறுதானியங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருமானத்தை அதிகரிப்பது குறித்து விளக்கினா். இதில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.