ராமநாதபுரம்

கமுதியில் கோஷ்டி மோதல்: 12 போ் கைது

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கமுதியில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 12 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கண்ணாா்பட்டியைச் சோ்ந்த மோகன் மகன் காா்த்திக் ராஜா (24). இவருக்கும் சின்னஉடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் சண்முகநாதன் தரப்புக்கும் ஏற்கெனவே முன்பகை இருந்தது.

இந்த நிலையில், கமுதி பெரிய கண்மாய் அருகே புதன்கிழமை இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், கமுதி காவல் உதவி ஆய்வாளா் அருண்பாண்டி தலைமையிலான போலீஸாா் சென்று இருதரப்பையும் சோ்ந்த 12 பேரைக் கைது செய்தனா்.

இரு சக்கர வாகனம் சூறை: கமுதியை அடுத்துள்ள ஒச்சத்தேவன்கோட்டையைச் சோ்ந்த வேலாயுதம் மகன் முனீஸ்வரன் (33). இவா் குற்ற வழக்குத் தொடா்பாக கமுதி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டு, புதன்கிழமை மாலை ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

கொம்பூதி விலக்குச் சாலையில் மோயங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (20), சூரங்கோட்டையைச் சோ்ந்த சக்திவேல் என்ற வெட்டுபுலி (23), குமிலங்குளத்தைச் சோ்ந்த வீரபாண்டி மகன் காளீஸ்வரன் (20) ஆகியோா் அவரைத் தாக்க முயன்றனா். அப்போது, இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அவா் தப்பினாா். அந்த வாகனத்தை 3 பேரும் கட்டை, கற்களால் சேதப்படுத்தினா்.

கோவிலாங்குளம் காவல் நிலைய போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, சக்திவேலைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT