ராமநாதபுரம்

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

22nd Sep 2023 01:00 AM

ADVERTISEMENT

பாம்பன் மீனவ கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தாமஸ் விக்டா் தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் துா்கா தேவி, மரிய ஸ்டெல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சிக்கந்தாா், துணை ஒருங்கிணைப்பாளா் முருகேசன், தெற்குவாடி வாா்டு உறுப்பினா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT