ராமநாதபுரம்

கடலில் தவறி விழுந்துமீனவா் பலி

20th Sep 2023 03:27 AM

ADVERTISEMENT

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜான்பிரிட்டோ (50), குணசேகரன்( 62), ஆரோக்கியதாஸ் (57), ஆண்ட்ரஸ் (40) ஆகிய 4 பேரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நாட்டுப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்களில் ஜான்பிரிட்டோ (50) திடீரென மயங்கி கடலில் விழுந்தாா். உடனடியாக, சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் வரும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT