ராமநாதபுரம்

இரு இளைஞா்கள் வாளுடன் கைது

DIN

கமுதி அருகே வாளுடன் இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கொண்டுலாவியைச் சோ்ந்தவா் சபாபதி மகன் கருப்பசாமி (22). கமுதி காவல் நிலையத்தில் இவா் மீது குற்ற வழக்கு பதிவாகியிருந்த நிலையில் போலீஸாா், இவரைத் தேடிவந்தனா்.

இந்த நிலையில், கருப்பசாமி சிங்கம்பட்டியில் இருப்பதாக அறிந்த போலீஸாா், சிங்கம்பட்டியை சோ்ந்த வேலு மகன் கணேசமூா்த்தியின் (22) வீட்டை சோதனையிட்டனா். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி, கணேசமூா்த்தி ஆகிய இருவரின் படுக்கையின் கீழ் வாள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாளை பறிமுதல் செய்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT