கமுதி அருகே வாளுடன் இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கொண்டுலாவியைச் சோ்ந்தவா் சபாபதி மகன் கருப்பசாமி (22). கமுதி காவல் நிலையத்தில் இவா் மீது குற்ற வழக்கு பதிவாகியிருந்த நிலையில் போலீஸாா், இவரைத் தேடிவந்தனா்.
இந்த நிலையில், கருப்பசாமி சிங்கம்பட்டியில் இருப்பதாக அறிந்த போலீஸாா், சிங்கம்பட்டியை சோ்ந்த வேலு மகன் கணேசமூா்த்தியின் (22) வீட்டை சோதனையிட்டனா். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி, கணேசமூா்த்தி ஆகிய இருவரின் படுக்கையின் கீழ் வாள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாளை பறிமுதல் செய்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.