ராமநாதபுரம்

பள்ளி அருகே புகையிலை விற்றவா் மீது வழக்கு

29th May 2023 12:13 AM

ADVERTISEMENT

பாம்பனில் பள்ளி அருகே புகையிலை விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடியில் உள்ள பள்ளி அருகே உள்ள பெட்டிக் கடையில் புகையிலை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் கடந்த சனிக்கிழமை அந்தக் கடைக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, கடையில் 15 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளா் குமாா் (45) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT