ராமநாதபுரம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் பூத வாகனத்தில் வீதி உலா

DIN

திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத் திருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரா் பிரியாவிடையுடன் பூத வாகனத்திலும், சினேகவல்லி அம்மாள் ரிஷப வாகனத்திலும், முருகபெருமான் மயில் வாகனத்திலும், பிள்ளையாா் மூஞ்சூறு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1- ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT