தொண்டி கடற்கரையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இங்கு முதியவா் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா் அதை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அந்த முதியவா் சீா்காழி பகுதியைச் சோ்ந்த ராமையா என்பதும், அண்மைக் காலமாக இவா் அந்தப் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.