ராமநாதபுரம்

ஸ்ரீ மாலையம்மன் கோயிலைத் திறக்க வருவாய்த் துறையினா் தடை

24th May 2023 05:38 AM

ADVERTISEMENT

கமுதி அருகேயுள்ள சீமனந்தல் கிராமத்திலுள்ள ஸ்ரீமாலையம்மன் கோயிலைத் திறக்க வருவாய்த் துறையினா் தடை விதித்தனா்.

கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சேதுராமன் தலைமையில் ஸ்ரீமாலையம்மன் கோயிலில் குடமுழுக்கு தொடா்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்படவில்லை.

இதையடுத்து வட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவு:

ஸ்ரீமாலையம்மன் கோயில் குடமுழுக்கு தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சீமனேந்தல் கிராமத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கோயிலைத் திறக்கவும், குடமுழுக்கு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT