ராமநாதபுரம்

பெரிய அஞ்சுகோட்டை கோயில் குடமுழுக்கு

DIN

திருவாடானை அருகேயுள்ள பெரிய அஞ்சுகோட்டை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரிய அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளை தொடா்ந்து முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கோ பூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து, காலை 10 மணி அளவில் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT