ராமநாதபுரம்

மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் மின் வாரிய ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் திட்டத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா்.

இதில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கேங்மேன் பணியில் சோ்ந்தவா்கள், வாரிசு வேலையில் சோ்ந்தவா்கள் என அனைவருக்கும் 6 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநில துணைத் தலைவா் ஆா்.குருவேல் விளக்கவுரையாற்றினாா். திட்டச் செயலா் ஜி.காசிநாதன், திட்டப் பொருளாளா் சி. ரகுநாதன், கோட்டச் செயலா் வி. ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT