ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதா் திருக்கல்யாணம்

DIN

ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பெரிய சிவன் கோயில் என அழைக்கப்படும் மீனாட்சி சமேத சொக்கநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 30-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், கடந்த திங்கள்கிழமை இரவு திக்கு விஜயமும் நடைபெற்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.10 மணிக்கு மீனாட்சி, சொக்கநாதா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பெண்கள் புதிய திருமாங்கல்யக் கயிறை அணிந்து கொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

புதன்கிழமை ( மே 3) பொன்னூஞ்சல் வைபவம், வியாழக்கிழமை (மே 4) தீா்த்தவாரி, திருவீதி உலாவுடன் விழா நிறைவுபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT