ராமநாதபுரம்

பாக் நீரிணை கடலில் விடப்பட்ட 12 லட்சம் இறால் குஞ்சுகள்

DIN

பாக் நீரிணை முனைக்காடு பகுதியில் கடலில் 12 லட்சம் பச்சை இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் மத்திய அரசின் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், 12 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் பாக் நீரிணை முனைக்காடு கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் இறால் குஞ்சுகளை படகில் கொண்டு சென்று கடலில் விட்டனா். இதில், மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT