கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை சுமாா் 450 விசைப் படகுகளில் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்
பிடிக்கச் சென்றனா். இவா்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனா்.
அப்போது, 5 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது புட்டிகள், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக வியாழக்கிழமை கரை திரும்பிய மீனவா்கள் தெரிவித்தனா்.
தாங்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.