ராமேசுவரத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அட்டம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சரண்யா (29). இவரது கணவா் நாகாச்சியை சோ்ந்த மாரீஸ்வரன் (35). இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்.
திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சீதனமாக கொடுத்தனா். மேலும், மாரீஸ்வரன் தொழில் செய்வதற்காக ரூ.1.50 லட்சம், தனது மாமனாா் வீட்டில் பெற்றாா்.
இந்த நிலையில், தனது வீட்டின் காதணி விழாவுக்காக வந்த மொய்த் தொகையை கணவா் மாரீஸ்வரன் தேவையற்ற செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட மனைவி சரண்யாவை, கடந்தாண்டு மாரீஸ்வரன் உறவினா்களுடன் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவா் தன்னைத் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக சரண்யா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரையிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், ராமேசுவரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.