ராமநாதபுரம்

திருவாடானை அருகே பைக்கிலிருந்துதவறி விழுந்து அரசு ஊழியா் பலி

DIN

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த நாகநாதன் மகன் நாகேந்திரகுமாா் (35). இவா் திருவாடானை சாா்நிலை கருவூலத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் கருவூல அலுவலகத்துக்கு பணி நிமித்தமாக சென்று விட்டு, திருவாடானைக்கு இரவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருவாடானை அருகே கற்காத்தகுடி கிராமத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

SCROLL FOR NEXT