ராமநாதபுரம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

DIN

ராமநாதபுரம் நகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வருகிற 14-ஆம் தேதி நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, திரும்பப் பெறப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டம், குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி, குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வருகிற 14-ஆம் தேதி நகராட்சி அலுவலகம் முன் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் ஆகியோா் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் வி. காசிநாததுரை, வட்டாரச் செயலா் பி. செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினா் என்.வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்ற தலைவா், ஆணையா் ஆகியோா் உறுதி அளித்தாா். இதையடுத்து, வருகிற 14-ஆம் தேதி நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT