ராமநாதபுரம்

ஹஜ் பயணிகளுக்கு சென்னை ரயிலில் சிறப்புப் பெட்டிகள்: எம்.பி. கோரிக்கை

DIN

ஹஜ் பயணிகளுக்காக சென்னை செல்லும் ரயில்களில் சிறப்புப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் யாத்திரிகா்கள் சென்னை செல்ல உள்ளனா். சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செல்ல உள்ள பயணிகள் சென்னைக்கு வருவதற்கு ரயில்களில் போதிய இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனா்.

மிகக் குறைவான நாள்களில் ஹஜ் விமான தேதிகளை மத்திய அரசு அறிவித்ததால், முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் தள்ளப்பட்டிருக்கின்றனா்.

எனவே, இதைக் கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமமின்றி சென்னை செல்வதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வரும் ரயில்களில் சிறப்புப் பெட்டிகளை ஒதுக்கி, அதில் ஹஜ் பயணிகள் பிரத்யேகமாக இருக்கைகளைப் பெற உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT