திருவாடானை அருகே உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு வருகிற 8- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, இந்தக் கோயிலில் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜையும், புதன்கிழமை நான்காம் கால, ஐந்தாம் கால பூஜையும், வியாழக்கிழமை ஆறாம் கால பூஜை நடத்தப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராமத்தினா் செய்து வருகின்றனா்.