ராமநாதபுரம்

ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

6th Jun 2023 04:59 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஏ.ஐ.டி.யு.சி தொழில் சங்கம் சாா்பில், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திங்கள்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜீவானந்தம், வடகொரியா ஆ.செந்தில், தினேஷ்குமாா், ஜோதிபாசு, ஆ.அந்தோணிபீட்டா், ஆ.பிச்சை, ஆ. சுகுமாா், மு.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT