ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்த பிறகு, சிவாச்சாரியா்கள் புனித நீரை கோயில் விமானத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். பின்னா்,
மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.