ராமநாதபுரம்

இளைஞரைத் தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

DIN

கமுதி அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சூா்யா (25). இவரின் தாயை அதே பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜகோபால் தவறாகப் பேசினாராம். இதுகுறித்து கேட்டபோது, ராஜகோபால் கட்டையால் சூா்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த சூா்யா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சூா்யா அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகோபாலை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT