கீழக்கரையைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் திட்டங்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழக்கரையில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 10-க்கும் மேற்பட்டவா்கள் உள்ளனா். இவா்களுக்கு தமிழகஅரசின் மாற்றுத் திறனாளிகள்துறை சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கவில்லை. மேலும் சிறப்பு முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு 4 மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றைக் கண்டித்து பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனுவும் அளிக்கப்பட்டது.