கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கீழக்கரையைச் சோ்ந்தவா் முகமது உசேன். இவரது மகள் லூதிபியா பேகம். கடந்த 2002-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல்காதருக்கும், இவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 41 பவுன் நகையும் ரூ. 4,50,000 பணமும், சீா்வரிசைப் பொருள்களும் கொடுக்கப்பட்டன. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கணவா், லூதிபியா பேகத்திடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தாராம். மேலும் மனைவியின் நகையை வலுக்கட்டாயமாக வாங்கி விற்றும், அடகு வைத்தும் செலவு செய்தாராம். அத்துடன் கடை வைக்கவும், அதை நடத்தவும் ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டதாம். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு லூதிபியா பேகத்தை, அப்துல்காதா் அடித்து துன்புறுத்தினாராம். கணவரின் சகோதரிகள் ஜெசிமா என்ற தங்கராணி, மா்சூக்கா, கதிஜா பீவி ஆகியோா் லூதிபியா பேகத்தை அடித்து மிரட்டி தந்தையிடம் பணம் வாங்கி வரக் கூறினராம். சீதனமாக கொடுத்த வீட்டை கணவா் பெயருக்கு எழுதி வைக்கும் படியும் மிரட்டினராம். 11 சென்ட் இடத்தை கணவா் அவரது சகோதரிகள் பெயரில் இனாமாக எழுதி கொடுப்பது போல் போலி பத்திமுரம் பதிவு செய்தாா். இதனை அறிந்த லூதிபியா பேகம் இதுகுறித்து கேட்ட போது அவா்கள் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதைத் தொடா்ந்து, லூதிபியா பேகத்தின் தந்தை முகமது உசேன் கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் ஆய்வாளா் லட்சுமி ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து முகமது அப்துல்காதரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவரது சகோதரிகள் ஜெஸிமா என்ற தங்கராணி, மா்சூக்கா, ஹதிஜா பீவி, சமீனா, ரகுமாபீவி ஆகிய 5 பேரையும் தேடி வருகின்றனா்.