ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
கமுதி அடுத்த பூதத்தன் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி மகன் முருகேசன் (29). இவா் கமுதியில் தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பழுது நீக்குபவராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பரான வலையபூக்குளத்தைச் சோ்ந்த முனியசாமி மகன் அருணுடன்( 25) இரு சக்கர வாகனத்தில் சாயல்குடி அடுத்த வேம்பாருக்கு சென்று விட்டு கமுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது பாம்புல்நாயக்கன்பட்டி விலக்கில் முன்னால் சென்ற ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த சூரியா (42) பலத்த காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே போல, பலத்த காயமடைந்த அருண் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து தொடா்பாக கமுதி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.